Friday 28 January 2011

நான் படித்தவை.....

தொடர்ந்து பதினேழு மணி நேரம் தூங்காமல் இருப்பவனின் செயல்பாடுகள் இரண்டு கப் ஒயின் குடித்தவனின் செயல்பாடுகளுக்கு இணையாக இருக்கும் என்பது ஐரோப்பிய பழமொழி. ஆனால் இவ்வாக்கை பொய்யாக்கி வெற்றி மேல் வெற்றியாகக் குவித்து சாதனை படைத்தவன் நெப்போலியன். அம்மாவீரனின் வாழ்க்கை வரலாற்றை மிகவும் விறுவிறுப்பாக "போர்க்களப்புயல் மாவீரன் நெப்போலியன்" என்ற தலைப்பில் குறிஞ்சி பதிப்பகம் வெளியீட்டில் குன்றில்குமார் எடுத்தெழுதியிருக்கும் விதம் அவருக்கு பாராட்டை பெற்றுக்கொடுக்கிறது. பிறப்பு, வளர்ப்பு, இளமை, கல்வி, போர், பொறுப்பு, காதல் என்று ஒவ்வொரு பக்கமும் படிக்கும் ஆர்வத்தை தூண்டுகிறது. நெப்போலியனின் சுவாரசியங்கள் என்ற தலைப்பு பயன் தரும் பக்கங்கள். நெப்போலியனின் யுத்த தந்திரங்களை விவரிக்கும் நடை, அவனின் தோல்விகளை எடுத்துரைக்கும் பாங்கு, மிக எளிமையான வார்த்தைகள் எழுத்தாளரின் படைப்புக்கு வழுசேர்க்கிறது.

No comments: